வவுனியா சிதம்பரபுரம் பழைய கற்குளம் பகுதியில் நேற்று மாலை 3.15 மணியளவில் புதையல் தோண்டிய இருவரை கைது செய்ததுடன் புதையல் தோண்டப்பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வவுனியா சிதம்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் சிறு கோவில் அமைத்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதே கிராமத்தினைச் சேர்ந்த கந்தவேல் சுதர்சன் (வயது-39) , வடிவேல் சின்னத்தம்பி (வயது-32) ஆகியோரை பொலிஸார் கைது செய்ததுடன் புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உயர் அழுத்த கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டார் , மின்பிறப்பாக்கி , கல் உடைக்கும் இயந்திரம், பூஜை பொருட்கள் என பல்வேறு பொருட்களை வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களினால் அப்பகுதியில் 30 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளதாவும் அதனுள் 15 அடி ஆழத்தில் நீர் காணப்படுவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM