தம்புத்தேகம ராஜாங்கனை சந்தி யில் 91 வயதான வயோதிபப் பெண் ஒருவரைக் கொலை செய்து பணத்தைக் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கும் மூவரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி தம்புத்தேகம நீதிமன்ற நீதவான் சஞ்சீவனி ரத்நாயக்க உத்தரவிட்டார்.
கடந்த 29 ஆம் திகதி இரவு இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 91 வயதான வயோதிபப் பெண் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். 29 ஆம் திகதி இரவு வீட்டின் சமையலறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து உறக்கத்திலிருந்த வயோதிபப் பெண்ணின் கைகள் இரண்டையும் கட்டிவிட்டு, வாயில் துணியைத் திணித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த பின்னர் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
அவரது கைப்பையில் இருந்த பணத்தை கொள்ளையிட்ட பின்னர் பையில் எஞ்சியிருந்த அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை வாவிக்கருகில் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.
இக்கொலை தொடர்பாக தம்புத் தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM