பெண் ஒருவருடனான கள்ளத் தொடர்பு காரணமாக, கர்ப்பிணியான தனது காதல் மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்த கணவன் உட்பட மூவருக்கு கேகாலை மேல்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இச் சம்பவம் கடந்த 1999 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
பாதுக்க, மாவத்தகம பிரதேசங்களைச் சேர்ந்த கமகே சந்திரகுமார, ரெங்கன் கோவிந்தசாமி எனப்படும் ராஜா, மாரிமுத்து ரமேஷ் கண்ணா ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முதலாவது குற்றவாளியான கமகே சந்திரகுமார 4 வருடமாக காதலித்த பின்னர் பாதுக்கவை சேர்ந்த மோனிகா ரசிகா குமாரி (21) என்ற பெண்ணை
திருமணம் செய்து அவிசாவளைக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் மனைவி கர்ப்பமடைந்திருந்த வேளையில் குற்றவாளியான சந்திரகுமார அவிசாவளை நகரில் தையல் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்திருந்த நிலையில் அவிசாவளை கைத்தொழிற் பேட்டையில் பணியாற்றிய வந்த யுவதி ஒருவருடன் காதல் தொடர்பை பேணிவந்துள்ளார்.
இந்நிலையில், தனது கள்ளக் காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக முதல் மனைவியை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய சந்திரகுமார, எசல பெரஹரா உற்சவம் பார்ப்பதற்காக அழைத்து செல்வதாக கூறி தனது நண்பர்கள் இருவருடன் கர்ப்பிணியான தனது மனைவியை அழைத்துக்கொண்டு தெரணியகல வீதியில் பஸ்ஸில் பயணித்துள்ளார்.
வரகாதென்ன பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து கர்ப்பிணி மனைவியை இறப்பர் தோட்டமொன்றுக்குள் அழைத்துச் சென்று அச்சுறுத்திய சந்திரகுமார அவரது நகைகளை அபகரித்ததுடன் நண்பர்களின் உதவியுடன் அவரை கழுத்தறுத்து கொலை செய்து மூவருமாக தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, கர்ப்பிணிப் பெண்ணின் சடலத்தை கண்டு குறித்த இறப்பர் தோட்டத்துக்கு அருகில் வசித்துவந்த பெண்ணொருவர் தெரணியகல பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
முதலில் தனது மனைவி சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக சந்தேகநபர் தெரிவித்துள்ள நிலையில் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை அடையாளம் காட்டியிருந்தார். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகள் தற்போதுவரை தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மனைவியை கொலை செய்வதற்கு கூலியாக பிரதான குற்றவாளி தனது நண்பர்கள் இருவருக்கும் மதுபானமும் தலா 500 ரூபா பணமும் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிரான குற்றம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதனையடுத்து கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கணேபொல அவர்களை குற்றவாளிகளாக கருதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் கர்ப்பிணிப் பெண்ணின் நகைகளை கொள்ளையிட்ட குற்றத்துக்காக தலா 5000 ரூபா அபராதத்துடன் தலா 3 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தாவிடின் மேலும் 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் தமைறைவாகியுள்ள ஏனைய சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து தண்டனையளிக்க நீதிமன்றம் களை கொள்ளையிட்ட குற்றத்துக்காக தலா 5000 ரூபா அபராதத்துடன் தலா 3 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தாவிடின் மேலும் 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் தமைறைவாகியுள்ள ஏனைய சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து தண்டனையளிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM