அதிவேக புகையிரத பாதைகள் வெளிநாடுகளில் காணப்பட்டாலும் இலங்கையின் புகையிரத பாதைகளை குறுக்கிட்டு பல சிறிய வீதிகள் இருப்பதனால் எமது நாட்டில் அதிவேக புகையிரத பாதைகளை நிர்மாணிக்க முடியாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு நூறு வருடங்கள் பூர்த்தியாவ தனை முன்னிட்டு கோட்டை புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணச்சீட்டு விநியோகத்தளம், பயணிகளுக்கான புதிய பாலம், பெஸ்டியன் மாவத்தையில் இருந்தான நுழைவாயில் ஆகியவற்றை போக்குவரத்து மற்றும் சிவில் விமானத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா திறந்து வைத்தார். மேலும் இதனை முன்னிட்டு விசேட முத்திரையும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்விற்கு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் வருகை தந்திருந்தார். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு நூறு வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் விசேட முத்திரையும் வெளியிடப்பட்டது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு உரையாற்றுகையில், நாட்டின் புகையிரத சேவையை தரமிக்கதாக மாற்ற முடியாமைக்கு தொழிற்சங்கங்களுக்கு இடையில் காணப்படும் அதிகார போட்டியே பிரதான காரணமாகும். இதனை தவிர்த்துக் கொண்டால் நிச்சயமாக தரமிக்க புகையிரத சேவையைமக்களுக்கு வழங்க முடியும்.
அத்துடன் தற்போது அனைத்து நாடுகளிலும் அதிவேக புகையிரத சேவைகள்ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இலங்கையில் அதிவேக புகையிரத பாதைகளை நிர்மாணிக்க முடியாது. ஏனெனில் புகையிரத பாதையை குறுக்கிட்டு பல சிறிய வீதிகள் காணப்படுகின்றன. ஆகவே இலங்கையில் புகையிரதங்களுக்கு அதி வேகமாக பயணிக்க முடியாது.
எனினும் வெளிநாடுகளில் காணப்படும் புதிய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள் ளோம். குறிப்பாக ஜி.பி.எஸ். முறைமையிலான சமிக்ஞை திட்டம், பயணச்சீட்டு களை இலத்திரனியல் முறைமையில் வழங்குதல் போன்ற காரியங்கள் முன்னெடுக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM