அமெரிக்க லாஸ் வெகாஸ் நகரிலுள்ள மன்டலே பே ஹோட்டலிலிருந்து இசை நிகழ்ச்சியொன்றைக் கண்டுகளிக்கக் கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி 58 பேரை படுகொலை செய்து 527 பேரைக் காயப்படுத்திய துப்பாக்கிதாரி, தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் தான் தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றி பல புகைப்படக்கருவிகளை பொருத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் அறி வித்திருந்த பொலிஸார், அந்தத் தொகை யில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட தாக்குதல்தாரியான ஸ்டீ பன் பட்டொக்கும் (64 வயது) தவறுதலாக உள்ளடக்கப்பட்டு விட்டதால் அவரை அந்தத் தொகையிலிருந்து தற்போது நீக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
இரு புகைப்படக்கருவிகள் ஹோட்ட லின் கூடத்திலும் ஒரு புகைப்படக்கருவி அறைக் கதவிலுள்ள பார்ப்பதற்கான துவாரத்திலும் பொருத்தப்பட்டிருந்தன. இதன்மூலம் சட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர்கள் தான் தங்கியிருந்த இடத்தை நோக்கி வருகிறார்களா என அவரால் இருந்த இடத்திலிருந்து கண்காணிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர் எதற்காக இந்தப் படுகொலைகளை மேற்கொண்டார் என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளதாக பொலி ஸார் கூறுகின்றனர்.
இது முன்கூட்டியே பரந்தளவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கை என பிராந்திய பாதுகாப்பு அதிகாரி ஜோசப் லொம்பார்டோ தெரிவித்தார்.
இந்நிலையில் தாக்குதல்தாரி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தாக்குதல்தாரியின் சடலத்துக்கு அருகில் இரு துப்பாக்கிகள் காணப்படுவதுடன் அருகிலிருந்த மேசையில் தற்கொலைக் கடிதம் போன்று தோன்றும் கடதாசி துண் டொன்றும் காணப்படுகிறது. ஆனால் பொலிஸார் அது தொடர்பில் விமர்சனம் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.
அதேசமயம் பட்டொக் ஹோட்டல் அறை கண்ணாடி ஜன்னலை சேதப்படுத்துவதற்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் சுத்தியல் அவரது அறையின் தரையில் இருப்பதை மேற்படி புகைப்படங்களில் ஒன்று வெளிப்படுத்துகிறது.
பட்டொக் 9 நிமிடங்கள் முதல் 11 நிமி டங்கள் வரை சூட்டை நடத்தியதாக தெரி விக்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்புப் படையினர் 72 நிமிடங்கள் கழித்தே அவர் தங்கியிருந்த அறையின் கதவை வெடி வைத்துத் தகர்த்து உள்ளே பிரவேசித்துள் ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM