அபேராம விஹாரையில் இடம்பெற்ற இரகசியக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், தீட்டப்பட்ட சதிகள் என அனைத்தும் அறியக்கிடைத்துள்ளன. வேட்டையாடும் விதத்தில் செயற்பட்டு ஊடகங்கள் இனவாதத்தை தூண்டிவிட முற்படக்கூடாது. ஊடகங்கள் எந்த இடத்தில் இருந்து செயற்பட வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று பிரத மர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
அரசாங்கத்தை வீழ்த்தப்போவதாக கூறும் சிலர், எப்போது விழும் என்றும் எதிர்பார்த்திருக்கின்றனர். அது ஒரு போதும் நடக்காது. அதற்காக நான் ஒன்றும் செய்ய வும் முடியாது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை நாம் புத்தங்
சரணங்கச்சாமி என்றே கூறினோம். ஆனால் மஹிந்த சரணங் கச்சாமி என்று கூறியவர்கள் பௌத்தத்தைப் பற்றிப் பேசுவதற்கு அருகதையற்றவர்கள். நாம் மக்களின் பலத்தைக் கொண்ட அரசாங்கமாக இருக்கிறோம். தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் சில விடயங்களை எதிர்பார்க்க முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது அனுரகுமார திசாநாயக எம்.பி.யினால் கொண்டு வரப்பட்ட பொலிஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் ரணில் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பொலிஸார் தொடர்பில் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே பிரச்சினைகள் இருந்து வருகின்றன. எனினும் ஆசியாவிலேயே சிறப்புத்தன்மை வாய்ந்து காணப்பட்ட இலங்கைப் பொலிஸ் துறையை மஹிந்த ரெஜிமன்ட் சீரழித்து விட்டது.
ஒரு நாட்டின் சட்டத்தை நிலை நாட்டுவதானால் அது பொலிஸ் ஊடகம் மற்றும்ீநீதி்துறை ஆகிய முத்தரப்புக்களின் இணைந்த செயற்பாட்டின் அடிப்படையிலேயே சாத்தியம்.
நாட்டில் சட்டத்தை பொலிஸாரினால் மாத்திரம் நிலை நிறுத்துவிட முடியாது. பொலிஸ் துறையை இல்லாது செய்தது போன்றே நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றையும் மஹிந்த ரெஜிமன்ட் இல்லாது செய்து விட்டது.
இன்று ஊடகங்கள் இனவாதத்தை பரப்புவதற்கு செயற்பட்டு வருகின்றன. ஆங்கில – சிங்கள ஊடகங்கள் இனவாதத்துக்கு துணைபோகின்றன. ஊடகவியலாளர்கள் பலர் இனவாதிகளாக செயற்பட்டு ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் பேசுகின்ற , எழுதுகின்ற ஊடகங்கள் “ஹோமாகம சம்பவம் பற்றி பேசுகின்றனவா, எழுதுகின்றனவா? எந்தவொரு ஆசிரிய தலையங்கமும் ஹோமாகம சம்பவத் தொடர்பில் எழுதியுள்ளதா?
ஊடகவியலாளரை வெள்ளை வேனில் கடத்துவதற்கு குறித்த ஊடகத்தின் ஆசிரியரே செயற்பட்டிருந்தமை எமக்கு தெரியாமல் இல்லை. ஊடகவியலாளர்கள் தமது கை சுத்தமாக இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். உங்களுக்காக நான் வருகிறேன்.
இன்று இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்துமே இனவாதத்தை தூண்டி செயற்பட்டு வருகின்றன. ஊடகங்கள் வேட்டையாடும் செயற்பாடுகளில் செயற்பட்டு இனவாதத்துக்கு துணைபோகக் கூடாது. ஊடகங்கள் எந்த இடத்தில் நின்று செயற்பட வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
எமது அரசாங்கம் எப்போது விழும் என்று சிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அரசாங்கத்தை வீழ்த்தி விடலாம் என்று சிலர் எண்ணி செயற்படுகின்றனர். மக்கள் பலம் கொண்ட அரசாங்கம் ஒருபோதும் வீழ்ந்து விடாது என்பதையும் வீழ்த்திவிடமுடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேவேளை அபேராம விஹாரையில் நேற்று (நேற்று முன்தினம்) இரகசியக்கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மஹிந்த ஆதரவு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இங்கு கலந்து கொண்டவர்கள், பேசப்பட்ட விடயம் என அனைத்தும் நாம் அறிவோம். இயன்றதைச் செய்து கொள்ளுங்கள். 100 பேரை போராட்டத்துக்கு அழைத்துவந்தால் நான் 1000 பேரை இறக்கிக் காட்டுவேன். 1000 பேரைக் கொண்டு வந்தால் நான் பத்தாயிரம் பேரை இறக்கிக் காட்டுவேன். அரசாங்கத்திடம் பலம் இல்லை என்றோ, எதுவும் செய்யமுடியாது என்றோ எண்ண வேண்டாம். அனைத்தையும் அடக்குவதற்கு செயற்படுவோம்.
தற்போது விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் நல்ல பெறுபேறுகளைக் காண முடியும்.
பௌத்தர்கள் என்ற வகையில் நாம் புத்தங் சரணங் கச்சாமி என்றும் சங்கங் கரணங் கச்சாமி என்றுமே கூறினோம். எனினும் மஹிந்த சரணங் கச்சாமி என்று கூறியவர்கள் இன்று பௌத்தம் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM