பதினொரு வயது சிறுமியை மூன்று சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 வயது வயோதிபருக்கு 24 மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்த கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 75000 ரூபா நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கண்டி தென்னக்கும்புர பிரதேசத்தை சேர்ந்த 50 வயது நிரம்பிய வயோதிபர் ஒருவருக்கே நீதிவான் இவ்வாறு தண்டனை விதித்துள்ளார். குறித்த சிறுமிக்கு தாத்தா உறவு முறையான இவ் வயோதிபர் குறித்த சிறுமியை மூன்று சந்தர்ப்பங்களில் மிக மோசமான வகையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே உடனடியாக கண்டி பொலிஸ் நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பொலிசாருக்கு முறைபாடு செய்துள்ளனர்.
இதனையடுத்தே பொலிசாரால் குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கண்டி மேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவான் 24 மாத கடூழிய சிறையும் சிறுமிக்கு 75000 ரூபா நஷ்ட ஈடாகவும் வழங்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM