மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த இரு தனிப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிருலப்பனை, பூர்வாராம விகாரையின் அரம்பேபொல ரத்னசார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளான மஹவாதுவ, வாதுவை பகுதியைச் சேர்ந்த பிரகீத் சாணக குணதிலக ஆகியோரைக் கைது செய்யவே இவ்வாறு விசேட பொலிஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர கேசரியிடம் தெரிவித்தார்.
இதில் பிரகீத் சாணக்க குணதில கவுக்கு எதிராக பாணந்துறையில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற் றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியமை மற்றும் பாணந்துறை வித்தியாலயம் ஒன்றின் பெண் அதிபரை அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் அது தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் குறித்த இருவரும் தற்போது தமது இருப்பிடங்களை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் எவரேனும் தகவல் அறிந்தால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸாவின் 0718591727 எனும் இலக்கத்துக்கு தகவல் தருமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM