அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முற்றாக அமுல்படுத்துவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு என்ற பெயரில் பல்வேறு குழப்பமான விடயங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றிவருகின்றது.
அத்துடன் 13ஆம் திருத்தம் முற்றாக நிறைவேற்றப்பட்டால் நாடு சமஷ்டி ராஜியமாக மாறுவதை யாராலும் தவிர்க்க முடியாது என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய அமைப்புகளின் மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
புதிய அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் சில வார்த்தைகளுக்கு பலவிதமான கருத்துக்களை அனைவரும் தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒற்றையாட்சி முறைமை மற்றும் புத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குதல் என்ற விடயங்கள் தொடர்பாகவே கதைத்து வருகின்றனர்.
ஆனால் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு என்ற பெயரில் அதில் ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்துக்கு முன்னுரிமை போன்ற விடயங்களை மக்கள் மத்தியில் பரப்பி குழப்பி இருக்கின்றது. இதனால் மக்கள் இந்த விடயங்கள் தொடர்பாக மாத்திரமே பிரச்சினைப்பட்டு வருகின்றனர். அரசாங்கம் திட்டமிட்டே இந்த விடயத்தை மேற்கொண்டுள்ளது. ஏனெனில் மக்கள் இந்த விடயங்களில் பிரச்சினை படும்போது, இறுதியில் இவை எதனையும் நான் நம்பமாட்டேன். 13 ஐ முற்றாக வழங்குவதே எனது நிலைப்பாடு என ஜனாதிபதி தெரிவிப்பார். இது தான் அரசாங்கத்தின் திட்டமாகும்.
மேலும் மக்கள் ஒற்றையாட்சி முறையிலும் புத்த மதத்துக்கு முன்னுரிமை என்ற விடயத்திலும் ஊரிப்போய் உள்ளநிலையில் 13ஆம் திருத்தத்தை முற்றாக நிறைவேற்ற ஆதரவளிப்பார்கள். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவும் 13ஐ வழங்குவதாக தெரிவித்திருந்தார். அதனால் அதனை வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்றே தெரிவிப்பார்கள்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி போராட்டங்களை மேற்கொள்ள எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் இதனை அங்கிகரித்துக்கொள்ளும் வரை பார்த்துக்கொண்டிருக்கின்றது. அத்துடன் 13ஐ முற்றாக வழங்கினால் என்ன நடக்கும் என்றும் பலருக்கு தெரியாது. புதிய அரசியலமைப்பும் 13ஐ ஒத்ததாகவே தயாரிக்கப்பட்டுவருகின்றது.
ஆனாலும் தற்போது இருக்கும் 13ஆம் திருத்தத்தில் சமஷ்டி இல்லை எனறே அனைவரும் தெரிவிக்கின்றனர். ஜே. ஆர். ஜயவர்த்தன ராஜீவ் காந்தியுடன் கைச்சாத்திடும்போது 13ஆம் திருத்தத்தில் பூரணமாக சமஷ்டி இருந்தது. ஆனால் மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் மறுக்கப்பட்டுள்ளதுடன் ஆளுநர்களை பதவிநீக்கும் அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சமஷ்டி சாயல் இதில் இல்லாமல் இருக்கின்றது.
என்றாலும் புதிய அரசியலமைப்பு என்ற பெயரில் மக்களை குழப்பி, தற்போது மாகாணங்களுக்கு மறுத்துவரும் அதிகாரங்களுடன் 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதுதொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. அத்துடன் அரசாங்கம் ஒருபோதும் புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்கப்போவதில்லை. 20ஆம் திருத்தம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து 13ஆம் திருத்தத்தை முழுமையாக கொண்டுவருவார்கள்.
எனவே 13 நிறைவேற்றப்பட்டால் இந்த நாடு சமஷ்டி ராஜியம் ஆவதை யாராலும் மறுக்கமுடியாது. அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதனை தடுப்பதற்கு நாட்டுக்குள் எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது பாரிய பிரச்சினையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM