இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் 9,000 கோடியை கடனாக பெற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் வங்கிகள் நெருக்கடி கொடுக்க கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மல்லையாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளன.
இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த மல்லையாவை கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி லண்டன் ஸ்காட்லார்ந்து பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மல்லையாவை லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சில மணி நேரங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் மல்லையா இன்று மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு எதிர் வரும் டிசம்பரில் விசாரணைக்கு வரும் என்று புலனாய்வுத்துறை தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM