ஹட்டன் குடாகம பகுதியில் காணாமல் போன முச்சக்கரவண்டி அகரப்பத்தனை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியில் 01.10.2017 மாலை தனது வீட்டுக்கருகில் நிறுத்தி வைக்கப்படிருந்த 6 லட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி காணாமல் போனதாக முச்சக்கரவண்டி உரிமையாளரினால் நேற்று காலை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணையை ஆரம்பித்த நிலையில் குறித்த முச்சக்கரவண்டி அகரப்பத்தனை போடைஸ் எல்பியன் தோட்டப்பகுதியில் அகரப்பத்தனை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியின் சில்லுகள், எஞ்சின், மற்றும் கண்ணாடிகள் என பல லட்சம் ரூபா பெறுமதியான உதிரிப்பாகங்கள் கழட்டப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இதுவரையில் அடையாளம் காணப்படாத போதிலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட முச்சக்கரவண்டியை ஹட்டன் பொலிஸாரிடம் அகரப்பத்தனை பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM