இலங்கையில் கல்வி பயிலும் 45 இலட்சம் மாணவர்களுக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த இலவச காப்புறுதி திட்டம் நேற்று அரசாங்கத்தினால் மாணவர் மயப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நேற்று காலை அலரிமாளிகையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கபீர் ஹாஷிம், ரவூப் ஹக்கீம், தயா கமகே, இராஜாங்க அமைச்சர்களான வீ.இராதாகிருஷ்ணன், ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாணவர்கள் உள்ளடங்கலாக பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர். நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் மாணவர்களுக்கான இலவச காப்புறுதி திட்டத்தை தற்போது அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.குறித்த காப்புறுதி திட்டத்திற்கு சுரக்ஷா என பெயரிடப்பட்டுள்ளது.
சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் ஊடாக நாடுபூராகவும் உள்ள சுமார் 45 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக காப்புறுதி வழங்கப்படவுள்ளது. குறித்த காப்புறுதி திட்டத்தின் ஊடாக வருடத்திற்கு 5 இலட்சம் ரூபா மாணவர்களின் சுகாதார நலனுக்காக வழங்கப்படவுள்ளன.
அரச வைத்தியசாலை சிகிச்சைக்காக ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபா வழங்கப்படும். இதன் ஊடாக அரச வைத்தியசாலைகளில் பெறமுடியாத மருந்துகள் மற்றும் பரிசோதனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் வைத்தியசாலைகளின் சிகிச்சைக்காக 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தனியார் வைத்தியசாலையின் அறைக்கு நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபா உள்ளடங்கலாக 30 ஆயிரம் ரூபாவும் வைத்திய செலவுக்காக 30 ஆயிரம் ரூபாவுமாக மொத்தமாக 2 இலட்சம் ரூபா சுரக்ஷா காப்புறுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.மேலும் வெளிநோயாளர் பிரிவுகளில் மருந்துகள் மற்றும் பரிசோதனை பெறுவதற்கு 10 ஆயிரம் ரூபாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர விபத்து காப்புறுதியின் பிரகாரம் மாணவன் விபத்தினால் உயிரிழக்கும் பட்சத்தில் 1 இலட்சம் ரூபாவும் நிரந்தர பாதிப்பு, இரண்டு கண் கள் பார்வை இழத்தல், இரண்டு கால்கள் இழத்தல், ஒரு கண் அல்லது ஒரு கால் இழத்தல் ஆகியவைக்கு 50 ஆயிரம் ரூபா வும் பெற்றோர் இறந்து விட்டால் கல்வி நடவடிக்கைகளுக்கு 75 ஆயிரம் ரூபா வழங் கப்படும்.
இதன்படி குறித்த காப்புறுதியை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பாடசாலை யில் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பிற்பாடு வைத்திய சேவைகளுக்கு செல விட்ட பணத்தை விண்ணப்பித்து மீள பெற்றுக்கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM