வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட போதைத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து கல்மடு நோக்கி இ.போ.ச .பேரூந்தில் 6 கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற 35வயதுடைய நபரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து நண்பரொருவர் வழங்கியதாகவும் கஞ்சாவினை கல்மடுக்கு கொண்டு சென்றால் பத்தாயிரம் ரூபா பணம் கிடைக்கும் எனவும் குறித்த நபர் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM