வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மரம் கடத்திய இருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
ஈச்சங்குளம், கரப்பங்குளம் குளகாட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்னவின் வழிகாட்டலில் இன்ஸ்பெக்டர் நிமால்சிறியின் தலைமையில் பொலிஸ் கொஸ்தபல்களான மதுர , குமார , தசநாயக்க , பாரதிராஜா , குமார ஆகியோர்களினால் இன்று மதியம் ஒரு மணியளவில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளுது.
கடத்தலில் ஈடுபட்ட கருவேப்பங்குளம், தரணிக்குளம் ஆகிய பகுதியை சேர்ந்த 27வயதுடைய இருவரையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மரம் வெட்டும் இயந்திரம் , சிறிய ரக உழவு இயந்திரம் , மதுர மரக்குற்றிகள் 30 என்பற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மரக்கடத்தில் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் இருவரையும் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM