இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றை மீட்டுச் சென்ற தமிழக மீனவர்கள், வழியில் ஒரு படகு மூழ்கியதால் அதிர்ச்சியடைந்தனர்.
இலங்கை கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் படகுகளை மீட்டுச் செல்ல தமிழக மீனவர் குழுவொன்று வந்திருந்தது.
மொத்தமுள்ள படகுகளில் 38 படகுகளை மட்டுமே மீட்க முடிவுசெய்திருந்த அந்தக் குழு, முதற்கட்டமாக ஏழு படகுகளை இன்று காலை ஏழு மணியளவில் காரைநகரில் இருந்து எடுத்துச் சென்றது.
இராமேஸ்வரம் புறப்பட்டு வந்துகொண்டிருக்கும்போது கடுங்காற்று வீசியதாலும், கடல் சீற்றம் காரணமாகவும் ஒரு படகு கடலில் மூழ்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் எஞ்சிய 6 படகுகளுடன் இராமேஸ்வரம் சென்று சேர்ந்தது.
இதேவேளை, ஊர்காவல்துறையில் உள்ள மேலும் 2 படகுகளை மீட்க மற்றொரு மீனவர் குழு இன்று இலங்கை வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM