யானை இறந்து 15 நாட்களாகின்றது இதுவரைக்கும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை ; மக்கள் விசனம்

Published By: Priyatharshan

30 Sep, 2017 | 01:17 PM
image

மட்டக்களப்பு, பதுளை வீதியில் அமைந்துள்ள வெளிக்காகண்டி கிராமத்தில் மக்களின் குடியிருப்புகளை பல தடவை புகுந்து அட்டகாசம் செய்த யானையொன்று  இறந்து 15  நாட்கள் ஆகியும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் உரியவர்கள் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானையை எரிப்பதா அல்லது புதைப்பதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் கிராம சேவகருக்கு இருந்தும் இன்று வரைக்கும் அந்த கிராம சேவகர்  சம்பவ இடத்திற்கு வரவில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானை இறந்து இன்றுடன் பதினைந்து நாட்கள் ஆகியதால் கிராமம் பூராகவும் துர்  நாற்றம் வீசுவதாகவும் இதை கவனிக்காமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது செங்கலடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் இல்லாத பட்சத்தில் அதற்கு அடுத்ததாக இருக்கும் அதிகாரி என்ன செய்கின்றார் என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமந்தப்பட்ட அதிகாரிகளே கிராம புறத்தில் உள்ள மக்கள் என்பதால் தம்மை ஏமாற்ற வேண்டாமெனவும் சிறு பிள்ளைகள் முதல் பெரியோர் வரை இருப்பதனால் சுகாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளதால் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்துக்கு புதிய கிராம சேவகர் நியமித்து இன்றுடன் நாற்பது நாட்கள் ஆகியும் இதுவரைக்கும் அந்த கிராமத்தைச் சென்று பார்வையிடவில்லையென மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31