ஸாஹிரா சுப்பர் – 16 கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 13ஆவது வருடமாக நடைபெறுவதற்கு தயாராகியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரில் இலங்கையின் பிரபல விளையாட்டு வீரர்கள் உட்பட பிரபலங்கள் கலந்துகொள்ளும் கால்பந்தாட்டப் போட்டியொன்றை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு ஸாஹிரா கல்லூரி தனது கால்பந்து வரலாற்றில் 100 ஆண்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அதன் பெருமையை பறைசாற்றும் வகையிலேயே 13 ஆவது ஸாஹிரா சுப்பர் – 16 கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
ஸாஹிரா சுப்பர் – 16 தொடர்
ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி 22 ஆம் திகதி முடிவடையவுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக இந்த தொடர் அணிக்கு எழுவர் கொண்ட கால்பந்து தொடராக ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அதனை சம்பிரதாயமான அணிக்கு பதினொருவர் கொண்ட தொடராக நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்களான ஸாஹிரா கல்லூரி முன்னாள் மாணவர் தலைவர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது வீரர்களுக்கு மேலும் திறமையை வெளிக்காட்டவும் இலங்கையின் இளம் கால்பந்து வீரர்களுக்கு பெறுமதி கொண்டதாகவும் இருக்கும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் கருதுகின்றனர்.
இந்த ஆண்டு தொடரில் ஸாஹிராவின் கடும் போட்டியாளரான ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி, கேட்வே சர்வதேச பாடசாலை, லைசியம் மற்றும் யாழ். புனித ஹென்றியரசர் கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 16 அணிகள் இந்தத் தொடரில் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM