நீண்ட நாட்களுக்குப் பிறகு இலங்கை அணி சிறந்ததொரு இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறது பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்.
அண்மைக் காலமாக பல சறுக்கல்களை சந்தித்து வரும் இலங்கை அணிக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் புதிய நம்பிக்கையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியில் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 419 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தப் போட்டியில் சந்திமால், திமுத் கருணாரத்ன மற்றும் திக்வெல்ல ஆகியோர்தான் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றனர். ஆனாலும் ஏனைய வீரர்கள் பெரிதாக ஓட்டங்களைக் குவிக்கா விட்டாலும் சற்று நிலைத்து நின்று ஆடி மறுமுனையில் உள்ள வீரர்களுக்கு துணையாக நின்றனர். குறிப்பாக தில்ருவன் பெரேரா 33 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
ஆனாலும் 117 பந்துகளை எதிர்கொண்டு மறுமுனையில் நின்ற சந்திமாலுக்கு முட்டுக்கொடுத்தார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் திமுத் கருணாரத்ன மற்றும் சந்திமாலின் நிதான ஆட்டத்தினால் 4 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
திமுத் கருணாரத்ன 205 பந்துகளுக்கு முகம்கொடுத்து 93 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து 7 ஓட்டங்களால் சதத்தைத் தவறவிட்டதை அடுத்து திக்வெல்ல களமிறங்கி ஆடிக்கொண்டிருக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்றைய இரண்டாம் நாளில் ஆட்டத்தை ஆரம்பித்த திக்வெல்ல மற்றும் சந்திமால் ஜோடி சற்று வேகமாக ஓட்டங்களைக் குவிக்க தொடங்கியது. இதனால் அணியின் ஓட்ட வீதம் அதிகரித்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்ட திக்வெல்ல அரைச்சதம் கடந்தார். இந்நிலையில் அவர் சதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகி 83 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி திக்வெல்லவின் விக்கெட் வீழ்ந்த பின்னர்தான் சற்று நிம்மதியடைந்தது. ஆனாலும் அடுத்து வந்த தில்ருவன் பெரேராவும் சளைக்காது மைதானத்தில் நிலைத்து நின்று சந்திமாலுக்கு முட்டுக்கொடுத்தார். இதனால் மறுமுனையில் நின்ற சந்திமால் 150 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக தில்ருவன் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவற இலங்கை அணி 419 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
சந்திமால் இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் நின்று 372 பந்துகளுக்கு முகம்கொடுத்து 155 ஓட்டங்களைக் குவித்தார்.
பந்துவீச்சில் பாகிஸ்தானின் அப்பாஸ் மற்றும் யசீர் ஷா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் விக்கெட்டைப் பறிகொடுக்காது 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM