சவூ­தியில் 10 வரு­டங்­க­ளாக இலங்கை பெண்ணுக்கு நடந்த அநீதி

Published By: Priyatharshan

30 Sep, 2017 | 11:48 AM
image

சவூதி அரே­பி­யா­வுக்கு வீட்­டுப்­ப­ணிப்­பெண்­ணாக சென்று 10 வரு­டங்கள் சம்­பளப் பணம் வழங்­கப்­படாமல் இருந்­து­வந்த இலங்கை பெண்­ணுக்கு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவின் தலை­யீட்­டினால் அதனை பெற்­றுக்­கொ­டுக்க முடிந்­த­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக  பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பேரா­தனை தெல்­கொட, போபிட்­டிய பிர­தே­சத்­தைச்­ சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தாயான ராம­சாமி பர­மேஸ்­வரி (வயது 54) 12.20.2007 அன்று வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் பதிந்­து­விட்டு வீட்­டுப்­ப­ணிப்­பெண்­ணாக சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றுள்ளார். அந்த தினம் முதல் அவ­ருக்கு வேலை­செய்த வீட்டில் சம்­பளம் வழங்­கி­ய­தில்லை. அத்­துடன் அவ­ரது உற­வி­னர்­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் வீட்டு எஜ­மானன் சந்­தர்ப்பம் வழங்­க­வில்லை.

இந்த சம்­பவம் தொடர்­பாக கேள்­வி­யுற்ற  அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள குறித்த பெண்­ணுக்­கு­ரிய சம்­பளப் பணத்தை பெற்­றுக்­கொ­டுத்து அவரை உட­ன­டி­யாக நாட்­டுக்கு அழைத்­து­வர நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தூத­ரக அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். அதன்­ பி­ர­கா ரம் தூத­ரக அதி­கா­ரிகள் பர­மேஸ்­வ­ரியின் எஜ­மானனை சந்­தித்து அவ­ருக்­கு­ரிய சம்­ப­ளப் ­ப­ணத்தை வழங்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யுள்­ளனர். என்­றாலும் அவர் அதனை மறுத்­துள்ளார். அத­னைத்­தொ­டர்ந்து அதி­கா­ரிகள் அந்த நாட்டுப் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். பொலிஸார் வீட்டு எஜ­மா­ னனை அழைத்து விசா­ரணை நடத்தி, அந்த பெண்­ணுக்­கு­ரிய சம்­ப­ளப் ­ப­ணத்தை வழங்­கு­மாறு கட்­ட­ளை­யிட்­டனர். அதன் பிர­காரம் அவ­ருக்­கு­ரிய சம்­ப­ளப்­பணம் 20 இலட்­சத்து 41 ஆயி­ரத்து 500 ரூபாவை அவ­ரு­டைய எஜ­மா­னி­ட­மி­ருந்து பெற­மு­டிந்­தது. குறித்த சம்­ப­ளப்­பணம் பர­மேஸ்­வ­ரி­யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் தற்போது சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவரை அவசரமாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்  ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31