சவூதி அரேபியாவுக்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்று 10 வருடங்கள் சம்பளப் பணம் வழங்கப்படாமல் இருந்துவந்த இலங்கை பெண்ணுக்கு அமைச்சர் தலதா அத்துகோரளவின் தலையீட்டினால் அதனை பெற்றுக்கொடுக்க முடிந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பேராதனை தெல்கொட, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ராமசாமி பரமேஸ்வரி (வயது 54) 12.20.2007 அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிந்துவிட்டு வீட்டுப்பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அந்த தினம் முதல் அவருக்கு வேலைசெய்த வீட்டில் சம்பளம் வழங்கியதில்லை. அத்துடன் அவரது உறவினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் வீட்டு எஜமானன் சந்தர்ப்பம் வழங்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற அமைச்சர் தலதா அத்துகோரள குறித்த பெண்ணுக்குரிய சம்பளப் பணத்தை பெற்றுக்கொடுத்து அவரை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பிரகா ரம் தூதரக அதிகாரிகள் பரமேஸ்வரியின் எஜமானனை சந்தித்து அவருக்குரிய சம்பளப் பணத்தை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். என்றாலும் அவர் அதனை மறுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த நாட்டுப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் வீட்டு எஜமா னனை அழைத்து விசாரணை நடத்தி, அந்த பெண்ணுக்குரிய சம்பளப் பணத்தை வழங்குமாறு கட்டளையிட்டனர். அதன் பிரகாரம் அவருக்குரிய சம்பளப்பணம் 20 இலட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாவை அவருடைய எஜமானிடமிருந்து பெறமுடிந்தது. குறித்த சம்பளப்பணம் பரமேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் தற்போது சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவரை அவசரமாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள் ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM