கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருகிறது. மாகாணத்தின் புதிய சபை தேர்ந்தெடுக்கும் வரை கிழக்கு மாகாணத்தின் நடைமுறை பொறுப்புக்கள் அனைத்தும் ஆளுநரின் அதிகாரத்தின் கீழ்கொண்டுவரப்படவுள்ளது.
2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றதைத்தொடர்ந்து கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டிருந்தது.
இரண்டு முதலமைச்சர்களைக்கொண்டு வகுக்கப்பட்ட காலப்பகுதியின் அடிப்படையில் ஆட்சி அதிகார நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தன.
இந்நிலையில் சபைக்கான ஆட்சி அதிகார காலப்பகுதி நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இன்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி முடிவுக்கு வருகின்றது. அத்துடன் அடுத்த தேர்தல் இடம்பெற்று புதிய சபையொன்று தேர்ந்தெடுக்கப்படும் வரையில் கிழக்கு மாகாணத்தின் நடவடிக்கைகள் யாவும் கிழக்கு ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் கீழ் வரவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM