யுத்தக் குற்ற விசாரணைகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றில் நிற்க நான் ஒருபோதும் தயாரில்லை. சர்வதேசத்திற்கு பதில் கூற விரும்பவுமில்லை, எனது கட்டளைக்கேற்ப யுத்தம் செய்த எவரையும் தண்டிக்க இடமளிக்க மாட்டேன் என பீல்ட்மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இராணுவத்தில் உள்ள பிரதான நிலை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
பெளத்த தேரர்களை விமர்சிப்பதாக சிலர் எம்மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். பெளத்த தேரர்களுக்கு நாம் உயரிய மரியாதைகளை வழங்கி வருகின்றோம். அவர்களை ஒருபோதும் நாம் அவமதிக்கவில்லை. மாநாயக்க தேரர்களை ஒவ்வொரு நாளும் வணங்கி வருகின்றோம். ஆனால் ஒருசில பெளத்த தேரர்கள் எம்மை விமர்சித்து சில தவறான கருத்துக்களை முன்வைத்தனர். நாம் இராணுவத்தை காட்டிக்கொடுக்க முயற்சிகளை எடுப்பதாக கூறினார்கள். அவர்கள் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தனர். அவர்கள் அரசியல் விமர்சனங்களை முன்வைத்து அதற்கு நாமும் அரசியல் கருத்துக்களை தெரிவிக்கும் போது அதனை தவறாக விமர்சிப்பது ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். இந்த நாட்டினை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எம்மத்தியிலும் உள்ளது. நாம் கூறும் கருத்துக்களை தவறாக அர்த்தப்படுத்தி மீண்டும் மோசமான அணியை உருவாக்க சில தேரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
மேலும் யுத்த குற்றங்கள் தொடர்பில் நான் முன்வைத்த கருத்துகளினால் பிரச்சினைகள் எழவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து இந்த பிரச்சினைகள் எமக்கு எதிராக எழுந்துள்ளன. இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு யுத்த குற்றம் தொடர்பிலான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின் தகவல்களை கொண்டே எமக்கு எதிராக அழுத்தங்கள் எழுந்துள்ளன. இதில் முழுமையாக இராணுவ வீரர்களை எவரும் குற்றம் கூறவில்லை. இராணுவத்தில் இருந்த பிரதான சிலர் மீதே இந்த குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் உண்மைத் தன்மையை விசாரணைகளின் மூலமாக ஆராய்வது தவறல்ல .
யுத்தத்தை நடத்திய இராணுவ தளபதி என்ற அடிப்படையில் எமது இராணுவத்தில் குற்றவாளிகள் இருந்தால் அவர்களை பாதுகாக்க நான் முன்வரமாட்டேன். அரசாங்கம் என்ற வகையில் இது அனைத்து தலைவர்களையும் பாதிக்கும். நான் ஒருபோதும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் சென்று நிற்கப்போவதில்லை. பதில் கூறப்போவதுமில்லை. எனது கட்டளையின் கீழ் செயற்பட்ட எவரையும் நீதிமன்றத்தில் நிறுத்த நான் தயார் இல்லை. விரும்பவும் இல்லை. அதேபோல் இராணுவத்தில் ஒரு சிலர் குற்றவாளிகளாக இருந்தால் அவர்களுக்கு எதிராக இந்த நாட்டின் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM