கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Published By: Priyatharshan

29 Sep, 2017 | 01:01 PM
image

வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளதாக போதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

குருணாகல், கல்கமுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் பகுதிக்கு பேருந்தில் 2 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவினை எடுத்துச்செல்லும் போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தமுத்தேகம பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சி பதும் தயாசிறி என்ற 34 வயதுடையவராவார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56