வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளதாக போதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குருணாகல், கல்கமுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் பகுதிக்கு பேருந்தில் 2 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவினை எடுத்துச்செல்லும் போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 7 மணியளவில் மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தமுத்தேகம பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சி பதும் தயாசிறி என்ற 34 வயதுடையவராவார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM