இலங்கை கிரிக்கெட் அணி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சிம்பாப்வே தலைவர் கிரேம் கிரீமர் தெரிவித்துள்ளார்.
கிரீமர் தலைமையிலான சிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது.
சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரை இலங்கை 2–-3 என தோற்று அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில் இந்தப் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது எழுந்தது. ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை எந்த ஒரு ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.
இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட சிம்பாப்வே அணித் தலைவர் கிரீமர், இலங்கை அணி வீரர்கள் அவ்வாறு நடந்து கொண்டிருப்பார்கள் என்று தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தமது நாட்டையும் கிரிக்கெட்டையும் அதிகம் விரும்புகின்றனர் என்றும் கிரீமர் கூறியுள்ளார்.
இலங்கை அணியினர் மீதான இந்த குற்றச்சாட்டு தமது அணி பெற்ற வெற்றியை குறைத்து மதிப்பிடுவதாக இருப்பதாகவும் சிம்பாப்வே அணித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு குறித்து நான் அதிகம் கூற விரும்பவில்லை. எமது அணியினர் சிறப்பாக ஆடினார்கள். அந்த பெருமையை யாராலும் பறித்துவிட முடியாது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்று நான் நம்பவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM