எம்.பி.க்களை விலைக்கு வாங்­கி­யுள்ள அரசு.!

Published By: Robert

29 Sep, 2017 | 11:30 AM
image

நாட்டை பிள­வு­ப­டுத்தும் பிரி­வி­னை­வாத அர­சியல் அமைப்பை உரு­வாக்க அர­சாங்கம் அமைச்­சர்­க­ளையும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் விலைக்கு வாங்­கி­யுள்­ளது. மாகா­ண­சபை சட்­டத்தை நிறை­வேற்ற எவ்­வாறு விலை பேசப்­பட்­டதோ அதேபோல் புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்­திலும் சதிகள் இடம்­பெ­று­வ­தாக தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச  தெரி­வித்தார்.  

Image result for விமல் வீரவன்ச virakesari

அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் விட­யத்தில்   மூன்றில் இரண்டு  பெரும்­பான்­மையை  நிரா­க­ரிக்க மக்கள் விடு­தலை முன்­னணி  துணை­வ­ர­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

புதிய அர­சியல் அமைப்பை தடுக்கும் மக்கள் தெளி­வூட்டல் செயற்­பா­டாக தேசிய சுதந்­திர முன்­னணி நேற்று கொழும்பு  புறக்­கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக நடத்­திய  துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வழங்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

நாட்டின் விலை­வா­சியை குறைப்­ப­தாக கூறிக்­கொண்டு ஆட்­சிக்கு வந்­த­வர்கள் இன்று தேங்காய் விலை, எரி­வாயு விலை உள்­ளிட்ட மக்­களின் அன்­றாட பொருட்­க­ளுக்­கான விலையை உயர்த்தி  வரு­கின்­றனர். ஒரு­புறம் நாட்டின் மக்­க­ளுக்கு வயிற்றில் அடிக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுத்து வரு­கின்ற அதே நிலையில் மறு­புறம் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு வாய்ப்­பு­களை உரு­வாக்­கிக்­கொ­டுக்கும் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

 மாகா­ண­சபை சட்­டத்தை நிறை­வேற்ற சில அமைச்­சர்­க­ளுக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் பாரிய அளவில் நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதே முறையில் தான் நாட்­டினை பிரிக்கும் பிரி­வி­னை­வாத அர­சியல் அமைப்பும் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது. 

பிரி­வி­னை­வாத செயற்­பாட்டை தடுத்த, சமஷ்­டியின் விளை­வு­களை நாட்­டிற்கு கற்­பித்த, ஒற்­றை­யாட்­சியை  உரு­வாக்க போரா­டிய ரோஹண விஜ­ய­வீர உரு­வாக்­கிய மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிகழ்­கால தலை­வர்­க­ளிடம் நாம் கேட்­பது ஒன்­றே­யாகும். ரோஹண விஜ­ய­வீ­ரவின் கொள்­கையை ஒரு வீத­மேனும் இன்னும் பின்­பற்றி வரு­கின்­றீர்கள் என்றால் இந்த பிரி­வி­னை­வாத அர­சியல் அமைப்பை எதிர்த்து பாரா­ளு­மன்­றத்தில் செயற்­பட வேண்டும். அரசியல் அமைப்பிற்கு எதிராக இவர்கள் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நாட்டிற்கும்   அதேபோல் ஜே.வி.பி யின் கொள்கைக்கும் பாரிய அழிவை ஏற்படுத்தும். இதனை மறந்துவிடாது செயற்பட வேண்டும்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08