மாணவி வித்தியா படுகொலை குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட 7 பேருடன் சேர்த்து இலங்கையில் மொத்தமாக மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் பட்டியலானது 1166 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 333 கைதிகளின் மரண தண்டனை தீர்ப்பானது மேன் முறையீடு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மரண தண்டனைக் கைதிகள் அனைவரும் நாடளாவிய ரீதியில் 5 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய கேசரியிடம் தெரிவித்தார்.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து மரண தண்டனை கைதிகளும் வெலிக்கடை, மஹர, போகம்பரை, அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இவ்வாறு 1166 மரண தண்டனை கைதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 333 பேரின் மேன் முறையீட்டு விசாரணைகள் நிறைவடைந்து அவர்களது மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 826 பேரின் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான மேன் முறையீட்டு விசாரணைகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன் தினம் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 7 பேரும் இதுவரை மேன் முறையீடு செய்யவில்லை.
மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள 1166 பேரில் 37 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந் நிலையில் நேற்று முன் தினம் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 7 பேரும் தற்போது போகம்பறை சிரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், அவர்களை மூன்று சிறைச்சாலைகளில் அடைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உள்ளக தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது. அதன்படி அந்த 7 பேரும் போகம்பறை, வெலிக்கடை மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளில் அடைக்கப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM