பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசகரவின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இவை கண்டறியப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் தஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை வெளிப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படும் எனவும் நேற்று மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை நேற்று மன்றுக்கு அறிவித்தார்.
வஸீம் தாஜுதீன் படு கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது இக்கொலை தொடர்பில் கைதாகி பிணையில் உள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோர் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
இந் நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்க மன்றில் ஆஜரானார். குறித்த கொலை தொடர்பிலான விசாரணையின் தற்போதைய நிலைமையை அவர் மன்றுக்கு அறிவித்தார்.
இதன்போதே, கொலை இடம்பெற்ற தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் தொடர்பில் சாதகமான தகவல்களை மிக விரைவில் வெளிப்படுத்தும் கட்டத்தில் உள்ளோம்.என தெரிவித்தார்.
தற்போதும் அது தொடர்பிலான விசாரணைகளை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார். இந் நிலையில் அது தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க ஆலோசனை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி சமர்பிக்க உத்தரவிட்டு அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM