கணனி திருத்துமிடம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி முற்றுகை ; பெண் உட்பட இருவர் கைது

Published By: Priyatharshan

28 Sep, 2017 | 06:54 PM
image

பத்தரமுல்லை கொஸ்வத்தை பிரதேசத்தில் கணனி திருத்தும் இடம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபசார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதில் முகாமையாளரையும் விபசார தொழிலில் ஈடுபட்ட பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட இரு மாடி வீட்டிலேயே குறித்த விபசார விடுதி மிகவும் சூட்சுமமாக இடம்பெற்று வந்துள்ளது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்