இன்றைய சூழலில் பெண்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றிக் கொண்டுவிட்டதால் மாத விடாய் சுழற்சியில் கோளாறுகள், குறைபாடுகள், சிக்கல்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள்.
அதிலும் மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெரும்பாலான பெண்களுக்கு அதிகளவிலான ரத்தபோக்கு ஏற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையானவர்கள் தங்களின் கருப்பையை அகற்றிவிடுகிறார்கள். ஆனால் தற்போது இந்நிலைக்கு மாற்றாக பல்வேறு வகையினதான சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
முதலில் பெண்கள் தங்களின் அதிகப்படியான இரத்தபோக்கிற்கான காரணத்தை கண்டறியவேண்டும். அதற்குரிய பரிசோதனைகளை செய்து கொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்து கருப்பை கட்டிகள், வீக்கம், சினைப்பை கட்டிகள், கருப்பை உட்புறச் சுவர் தடிமன் ஆகியவற்றைப் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதே போல் எண்டோமெட்ரியர் பயாப்சி எடுத்து கருப்பை வாய் புற்றுநோயின் தொடக்க கால அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இதன் பிறகே இரத்தப்போக்கை கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சைகளை செய்து கொள்ளவேண்டும். மாத்திரைகள், ஹோர்மோன் ஊசிகள் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் தற்போது கருப்பையில் பொருத்திக் கொள்வது போன்ற ஹோர்மோன் சுரப்பி கருவிகளும் கிடைக்கிறது. அதனையும் பயன்படுத்திக் கொண்டு இதற்கு தீர்வு பெறலாம்.
டொக்டர் எழிலரசி
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM