இப்படியும் ஒரு தாய்.! இது தான் கலிகாலம் என்பதா.?

Published By: Robert

28 Sep, 2017 | 11:16 AM
image

இறைச்­சியை வாட்டும் உப­க­ர­ணத்தில் தனது 2 வயது மக ளை உயி­ருடன் வைத்து சமைத்துக் கொன்ற குற்­றச்­சாட்டில் தாயொ­ருவர் கைது­செய்­யப்­பட்ட அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம்  பெல்­ஜி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

 சட்டக் கார­ணங்­க­ளுக்­காக கைது­செய்­யப்­பட்­டுள்ள 27 வயது தாயின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

 பிரஸல்ஸ் நகரின் வடக்கே ஸெம்ஸ்ட் நக­ரி­லுள்ள வீட்டின் கார் தரிப்­பி­டத்தில் வைத்து அந்தத் தாய் தனது மகளை உயி­ருடன் நிலக்­கரித் தணலைக் கொண்ட உப­க­ர­ணத்தில் வைத்து வாட்­டி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

 குழந்­தையின் கூச்­சலைத் தொடர்ந்து அந்த வாகனத் தரிப்­பி­டத்தின் வாயில் கதவின் கீழாக புகை வெளிப்­ப­டு­வதை அவ­தா­னித்த அய­ல­வர்கள் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து பொலிஸார் சம்­பவ இடத்தை முற்­று­கை­யிட்­டனர்.

இதன்­போது  அந்த வாகனத் தரிப்­பி­டத்­தி­லி­ருந்த  இறைச்சி வாட்டும் உப­க­ர­ணத்தில் குழந்­தையின் முழு­மை­யாக எரிந்து கரு­கிய சடலம் இருப்­பதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

மேற்­படி குழந்­தையின் தாய், தனது கணவர் தன்­னி­ட­மி­ருந்து விவா­க­ரத்துக் கோரி­ய­தை­ய­டுத்து கடும் மன அழுத்­தத்­திற்­குள்­ளா­கி­யி­ருந்­த­தாக அய­ல­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இந்­நி­லையில் அவர் தற்­கொலை செய்யும் ஒரு முயற்­சியின் அங்­க­மாக தனது  குழந்­தையைக் கொன்­றி­ருக்­கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  

இது தொடர்பில் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை களை மேற்கொண்டுள்ளதாக  பிராந்திய பொலிஸார் தெரிவிக் கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right