ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் கிரிக்கெட் தொடர்.
இந்த அறிவித்தலை ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் ஏற்பாட்டுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பிக்பாஷ், ஐ.பி.எல். போன்ற தொழில்முறை கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபலமாக இருந்த ஒரு தொடர்தான் இந்த ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் கிரிக்கெட் தொடர்.
அதன்படி இவ்வாண்டுக்கான தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி மற்றும் 29ஆம் திகதிகளில் ஹொங்கொங் கொவுலுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் இலங்கை உட்பட 8 நாடுகள் கலந்துகொள்கின்றன. கடைசியாக இந்தத் தொடர் 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டம் வென்றது.
இதுவரையில் நடைபெற்றுள்ள போட்டித் தொடர்களில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா 5 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM