"வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே"

Published By: Robert

28 Sep, 2017 | 09:46 AM
image

வித்­தி­யா­வை நாம் கொலை செய்­ய­வில்லை. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியே உள்ளனர். எம்­மீது குற்றப் புல­னாய்வு பிரி­வினர் பொய்யான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் பொய்­யான சாட்­சி­யங்­க­ளையும் தயார்செய்து எங்­க­ளுக்கும் வித்­தி­யா­வுக்கும் நீதி கிடைக்­காது செய்­து ­விட்­ட­னர் என்று வித்­தியா படு­கொலை வழக்கின் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட ஏழு குற்­ற­வா­ளி­களும் ரய­ல்ட் அட்பார் மன்றில் தெரி­வித்­தனர்.

வித்தியாமீதான கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ரய­லட் அட்பார் நீதி­மன்றில்  திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்கம் பிரே­ம­சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகி­யோரை உள்­ள­டக்கி வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தல­மையில் இடம்­பெற்­று­வந்­தது. 

இவ் வழக்கு விசா­ர­ணையில் அனைத்து வழக்கு நட­வ­டி­கை­களும் பூர்த்­தி­யாக்­கப்­பட்டு நேற்று புதன்­கி­ழமை  காலை 10.02 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்­போது குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்ட ஏழு பேருக்கும் எதி­ரான தண்­டனை தீர்ப்­பா­னது வாசிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு மன்­றா­னது ஏன் உங்­க­ளுக்கு இத் தண்­டனை வழங்­கப்­ப­டக்­கூ­டாது என அவர்­க­ளிடம் வினவி­யது.

இதற்கு ஒவ்­வொரு குற்­ற­வா­ளி­களும் தனித்­த­னி­யாக பதி­ல­ளித்தனர். இதன்­படி இவ் வழக்கின் இரண்­டா­வது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பூபா­ல­சிங்கம் ஜெயக்­குமார் கூறும்­போது, நான் ஒன்றும் செய்­ய­வில்லை, சந்­தே­கத்தில் தான் என்னை பிடித்­தார்கள், நான் எதுவும் செய்­ய­வில்லை, எனக்கு பிள்ளை குட்­டிகள் என கூறி அழுதார். இவரை தொடர்ந்து மூன்­றா­வது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பூபா­ல­சிங்கம் தவக்­குமார் கூறும்­போது, எனக்கும் இந்த குற்­றச்­சாட்­டுக்கும் சம்­பந்­த­மில்லை, நான் ஏன் இந்த கொலையை செய்ய வேண்டும், சி.ஜ.டியினர் பொய்­யான குற்­றச்­சாட்டை சுமத்­தி­யுள்­ளனர் என தெரி­வித்தார். இவரை தொடர்ந்து நான்­கா­வது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்த மகா­லிங்கம் சசி­தரன் கூறும்­போது, எனக்கும் இந்த சம்­ப­வத்­திற்கும் தொடர்­பில்லை, நான் 12ஆம் திகதி கொழும்பில் தான் இருந்தேன். ஸ்ரேசன் றோட் ஏஞ்சல் லொட்ஜில் தான் இருந்தேன், ஸ்ரேசன் றோட்­டில் எல்லா இடத்­தி­லயும் சீ சீ.ரி.வி கமரா இருக்­கி­றது. அதில் பார்த்­தாலே தெரியும், அதனை செய்­யுங்கள், 13 திகதி வீடி­யோவ நாங்கள் சமர்ப்­பிக்­க­வில்லை. சி.ஜ.டியினர் தான் சமர்­ப்பித்­தார்கள். எனக்கு துணையாக இருந்த அம்­மாவும் சிறை­யில அடைத்து அவாவும் செத்து போய்­விட்டா, அம்­மா­விட்டா மற்­றது மனைவி பிள்­ளைகள் தான், அவை­ய­ளுக்கு ஒன்னும் தெரி­யாது. அப்­படி இருந்தும் மனை­விய வீடியோ

எடுத்­து­வர அனுப்­பினான், யாழ்.ஹோட்டல் வாறன் என்டு சொல்லி போட்டு அதுக்கு பிறகு போன்­ஆன்சர் பண்­ண­வில்லை. எல்லாம் கட­வு­ளுக்கும் தெரியும் என தெரி­வித்தார்.

இதனை தொடர்ந்து 5ஆவது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தில்­லை­நாதன் சந்­தி­ர­காசன் கூறும்­போது, எனக்கும் இந்த சம்­ப­வத்­துக்கும் தொடர்­பில்லை, நான் ஐந்து பொம்­பிள பிள்­ளை­க­ளோட தான் பிறந்தேன். சி.ஐ.டியினர் பொய்­யான சாட்­சி­யத்தை உரு­வாக்கி எங்­கள குற்­ற­வா­ளி­க­ளாக காட்­டி­விட்­டார்கள். இதில் எங்­க­ளுக்கும் நீதி கிடைக்­க­வில்லை, வித்­தி­யா­வுக்கும் நீதி கிடைக்­க­வில்லை. இது கண்­கட்டி வித்த போன்று உள்­ளது. வீடியோ எடுத்தம் எடுத்தம் என்று சொல்­கி­றார்கள். அந்த வீடி­யோவ சி.ஐ.டி யினர் எடிட் பண்ண கொடுத்­தி­ருக்­கி­றார்கள் போல, அந்த வீடி­யோவை எடுத்து நீதி­ப­திகள் ஐயாட கையில கொடுக்க வேணும். அத வைச்சு உண்­மை­யான குற்­ற­வா­ளி­கள கண்­டு­பி­டிக்க வேண்டும். ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றத்­தில மயூரன் பெட்­ட­யல வைத்து ஐந்து பேறு­டைய டி.என். என்று கொடுத்­தவர். அந்த விந்­த­னுக்கள் அழிக்­கப்­பட்­டதா தெரி­ய­வில்லை. இது தமி­ழ­னுக்கு ஏற்­பட்ட அவ­மானம், இப்­ப­டி­யான சம்­ப­வங்கள் எங்கள் ஊர்ல முதலே நடந்­தி­ருக்கு. அத அப்­பவே கவ­னித்­தி­ருந்தா இப்­போது இப்­ப­டி­யான சம்­பவம் நடந்­தி­ருக்­காது.

எங்­க­ளுக்கு முதலில் யாரும் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­க­வில்லை. இப்­போது தான் ரகு­பதி ஐயா ஆஜா­ரானர், எங்­க­ளுக்கு முதல்­லயே சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கி­யி­ருந்தால் நாங்கள் இன்று குற்­ற­வா­ளிக்­கப்­பட்­டி­ருக்க மாட்டோம். சட்­டத்­தில கூறு­கின்­றார்கள் 1000 குற்­ற­வாளி தப்­பித்­தாலும் ஒரு நிர­ப­ராதி கூட தண்­டிக்­கப்­பட கூடாது என்று. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளி­யில இருக்­கின்­றார்கள். எல்­லோரும் அவர்­க­ளிடம் கவ­ன­மாக இருங்கள் என தெரி­வித்தார்.

இதன்­பின்னர் 6ஆவது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட சிவ­தேவன் துஷாந்தன் கூறும் போது,

நானும் ஐந்து பெண் பிள்­ளை­க­ளோட பிறந்­தவன், நான் வித்­தி­யாவை காத­லித்­த­தாக கூறு­கின்­றார்கள். நான் வித்­தி­யாவை காத­லிக்­க­வில்லை, சுரேஸ்­கரன் என்­ப­வரை முதலில் கிளி­நொச்­சில வைத்து பிடித்த சி.ஐ.டியினர் பின்னர் அவரை விட்­டு­விட்­டார்கள். அப்­படி விடும் போது 800 ரூபா காசு கொடுத்தே இர­யலில் ஏற்றி அனுப்­பி­னார்கள். பின்னர் ஒரு­வ­ருடம் கழித்து பிடித்­தார்கள். என்­னையும் அரச சாட்­சி­யாக மாறு­மாறு நான்காம் மாடி­யில வைத்து கேட்­டார்கள். எங்­க­ளுக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் நடக்­கவே கூடாது. உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் வெளியில் இருக்­கின்­றார்கள். அவர்­களை தப்ப விட்­டது சி.ஐ.டியி­னர்தான். நான் என்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரிக்­கின்றேன். கடவுள் ஒருவர் இருக்­கின்றார். அவர் எல்­லோ­ரையும் பார்த்­துக்­கொண்டு தான் இருக்­கின்றார் என தெரி­வித்தார். இவரை தொடர்ந்து 8ஆவது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட ஜெய­தரன் கோகிலன் கூறும்­போது,

நான் உதவி செய்­யவும் போக­வில்லை, ஒத்­தாசை செய்­யவும் போக­வில்லை. நான் எந்­த­வொரு தப்பும் செய்­வில்லை. எனக்கு நீதி கிடைக்கும் என்று தான் நான் இவ்­வ­ளவு நாள் பொறுத்­தி­ருக்­கிறேன் என தெரி­வித்தார். இறு­தி­யாக 9ஆவது எதி­ரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த மகா­லிங்கம் சசிக்­குமார் (சுவிஸ்­குமார்) கூறும்­போது, எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஏனைய அத்தனை பேரும் சொன்

னதும் உண்மை, இது சி.ஐ.டியினரால் உருவாக்கப்பட்ட பொய் கேஸ், இதுல பெரிசா நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை, உங்களால முடிஞ்சா சட்லைட் மூலமாக யார் இத செய்தது என்று கண்டுபிடியுங்கள், சி.ஐ.டியினர நம்பி பிரியோசனம் இல்லை.

நீதிபதி ஐயாக்கள் சட்டலைட் மூலமா தேடிப் பாருங்கள் உண்மையான குற்றவாளிகள் வெளியே தான் இருக்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டை சி.ஐ.டி யினர் போட்டார்கள். இந்த நிலமை இனி இங்க யாருக்கும் ஏற்பட கூடாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இவர்களுக்கான தீர்பானது மன்றினால் வாசிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58