ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக தலைமையகத்தில் வைகோ மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவிவிட்ட இலங்கை அரசைக் கண்டித்து இன்று 27-ஆம் திகதி காலை 11 மணிக்கு சென்னை யில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கையில், ''சுவிட்ஸர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையகத்தின் 36 ஆவது அமர்வு செப்டெம்பர் 11 ஆம் திகதி தொடங்கி 29 ஆம் திகதி வரை நடை பெறுகிறது.
அங்கு உரையாற்றிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஈழத்தமிழர்கள்தான் இலங்கை மண்ணின் பூர்வகுடி மக்கள் என்பதையும், வரலாற்றின் வைகறை பொழுதிலிருந்து தனி அரசு நடத்திய வீர வரலாறு தமிழர்களுக்கு உண்டு என்பதையும் சான்றுகளுடன் சுட்டிக்காட்டினார். இலங்கையிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய 1948இ-ல் சிங்களவர் கைகளில் ஆட்சி அதிகாரம் வந்த பிறகு கடந்த 60 ஆண்டு காலமாக ஈழத்தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளானதையும், கல்வி, வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டு, மொழி, இன, பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டதையும், ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக தந்தை செல்வா தலைமையில் நடத்திய அறவழிப் போராட்டங்களை இலங்கை அரசு மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கியதையும் வைகோ எடுத்துரைத்தார்.
ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு தள்ளப்பட்டு, பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கம் போராடியதையும், ஈழத்தமிழர்களை பூண்டோடு கருவறுக்க 2009-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை யில் ராஜபக் ஷ அரசு அப்பாவி தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததையும் வைகோ எடுத்துரைத்து, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப் படுகொலை நடத்திய இலங்கை அரசு மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், தமிழர்கள் இறையாண்மை உள்ள அரசை அமைப்பதற்கு ஐ.நா.மன் றம் உலகின் பல நாடுகளில் நடத்தியது போன்று தமிழ் ஈழம் அமைவதற்கும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் முழங்கினார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளுடன் தனியாக உரையாடிய வைகோ, ஈழத்தமிழர்களின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில்தான் நேற்று 25-ஆம் திகதி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் முதன்மை அரங்கில் நடந்த கூட்டத்தில் வைகோ இருமுறை உரையாற்றிவிட்டு வந்த நேரத்தில் சிங்களவர்கள் ஆறேழு பேர் வைகோவைச் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒரு சிங்களப் பெண்மணி இலங் கைப் பிரஜை அல்லாத நீ எப்படி இலங்கை யைப் பற்றிப் பேசலாம்? என்று கேட்டார்.
எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி இரத்த உறவு இருக்கிறது. எனக்கு பேச உரிமை இருக்கிறது என்று பதிலடி கொடுத்த வைகோவை சிங்களவர்கள் பலர் சூழ்ந்து கொண்டு தாக்க முயற்சித்துள் ளனர்.
பன்னாட்டு அரங்குகளில் ஈழத்தமிழர்க ளின் குரலை எழுப்ப முடியாமல் ஒடுக்கி விடலாம் என்று எக்காளமிட்ட இலங்கை அரசு, வைகோ மூலம் ஐ.நா.வில் ஈழத் தின் குரல் ஓங்கி ஒலிப்பதை தாங்க முடியாமல் ஆத்திரப்பட்டு, வைகோ மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவி விட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலேயே நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஐ.நா. மன்றத்துக்கு விடுக்கப்பட்ட அறைகூவல் ஆகும். இலங்கை இனவெறி அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈழத்தமிழர்களின் நீதிக்காக அரசியல் சுயநிர்ணய உரிமைக்காக ஐ.நா. மன்றத் தில் உரிமை முழக்கமிடும் வைகோவின் முழு பாதுகாப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையகம் உறுதிசெய்ய வேண்டும். இந்தியாவின் குடிமகன், பாராளுமன்றத்தில் 24 ஆண்டு காலம் உறுப்பினராக பணியாற்றிய வைகோ மீது நடந்த தாக்குதல் முயற்சியை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக தலைமையகத்தில் வைகோ மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவிவிட்ட இலங்கை அரசைக் கண்டித்து நாளை (இன்று) 27ஆம் திகதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.'' என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM