பேஸ்புக் பதிவால் நேர்ந்த விபரீதம் : வவுனியா பாடசாலையில் சம்பவம்

Published By: Digital Desk 7

27 Sep, 2017 | 08:45 AM
image

வவுனியாவில் அமைந்துள்ள பிரபலமான பாடசாலையொன்றில் பேஸ்புக் பதிவேற்றத்தில் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

குறித்த பாடசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இரண்டு மாணவர் குழுக்களிடையே சிறு சிறு கைகலப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்து வந்துள்ளது.

குறித்த இரு மாணவ குழுக்களில் ஒருவரின் பேஸ்புக் பதிவால் நேற்று பாட நேர இடைவேளையின் போது பாரிய கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தரம்12இல் கல்வி கற்கும் சிவராசா சிவபேருசன் என்ற மாணவர் காயமடைந்து  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் மீது தாக்குதல் நடாத்திய ஏனைய மூன்று மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர்கள் பாடசாலையின் அதிபர் நிர்வாகத்தினரின் திரனற்ற செயற்பாடே காரணம் எனவும் மாணவர்களுக்கிடையிலான பிரச்சினையை ஆரம்பத்திலேயே தீர்த்து வைத்திருக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடமாவது  தெரிவித்திருக்க வேண்டும் என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இவ்வாறு பிரச்சினைக்குரிய மாணவர்களை உடனடியாக பாடசாலையிலிருந்து விலக்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறித்த மாணவர்களை நீதி மன்றில் ஆஜர்படத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15