அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை அமைச்சரவை, அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் நிதியமைச்சு கோரியுள்ளது.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இவ்வாண்டு நவம்பர் மாதமளவில் கையளிக்கப்படவுள்ளது.
உறுதியான பொருளாதாரம், வளம் நிறைந்த நாடு மற்றும் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள் என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு சிறந்த வரவு-செலவுத் திட்டத்தை அமுல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கு பொதுமக்களிடம் இருந்தும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான முன்மொழிவுகளை அனுப்ப விரும்புவோர், Ministry of Finance, The Secretariat, Colombo 01, என்ற முகவரிக்கோ அல்லது info@itmd.treasury.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, எதிர்வரும் பதினைந்தாம் திகதிக்கு முன்னதாகக் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று முக்கிய தூண்களைக் கொண்டே இந்த நல்லாட்சி அரசு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேநேரம், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது அவசியம். இதற்காக, தொழில் நிபுணர்கள், கல்வியாளர்கள், உற்பத்தி, சேவை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் பரிச்சியமுள்ளவர்கள் தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பி வைக்கலாம் என்று நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM