நீதிமன்றை ஏமாற்றிய பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு சிறை

Published By: Devika

26 Sep, 2017 | 11:13 PM
image

நீதிமன்றுக்கு அபராதமாகவும், பிணைத் தொகையாகவும் கிடைத்த பணத்தை மோசடி செய்த குற்றத்தின் பேரில், கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் தலைமைப் பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு 22 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு முதல் சுமார் மூன்றரை வருட காலத்தினுள், குறித்த பதிவாளரும் மேலும் ஐந்து பேரும் நீதிமன்றில் செலுத்தப்பட்ட பிணைத் தொகைகள் மற்றும் அபராதத் தொகைகளை கணக்கில் காட்டாமல் மோசடி செய்து வந்துள்ளனர்.

இது குறித்த விசாரணையின்போது, குறித்த பெண் பதிவாளர் தாம் தவறிழைத்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன், அதிகாரிகள் சிலரின் அழுத்தத்தின் பேரிலேயே தாம் அவ்வாறு மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

அவர் இழைத்த குற்றத்திற்கு மற்றொரு தண்டனையாக அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காரணிகளை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுவாரச்சி, 22 மாத சிறைத் தண்டனையை அந்தப் பதிவாளர் பத்து வருடங்களுக்குள் அனுபவிக்க வேண்டும் என்றும் தமது உத்தரவில் குறிப்பிட்டார்.

சுமார் பத்தொன்பது மில்லியன் ரூபாவை மோசடி செய்த முன்னாள் தலைமைப் பதிவாளருக்கு, சிறைத் தண்டனையுடன் 13,500 ரூபாவை அபராதமாகவும் அரசுக்கு நட்ட ஈடாக ஒரு மில்லியன் ரூபாவைச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59