இன்றைய திகதியில் கொர்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய கம்பனிகளில் வேலைசெய்யும் ஊழியர்களின் பணித்திறன் பாதிக்கபடாமல் இருப்பதில் கவனமுடன் இருக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஊட்டச்சத்து நிபுணர்களை பணிக்கு அமர்த்தி, என்ன சாப்பிடவேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறது.
இது குறித்து ஊழியர்களிடத்தில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அவர்களின் பரிந்துரையில் இடம்பெற்ற சில விடயங்கள் கவனத்துக்குரியது தான். அதிலும் குறிப்பாக சிலரின் மூட்டு வலிக்கு காரணமாக திகழும் உணவு பொருள்களின் பட்டியலில் நைட்ஷேட் உணவுப் பொருளுக்கான வகைகள் தவிர்க்கவேண்டும் என்பது ஆய்வுக்குரியது.
நைட்ஷேட் உணவு வகைகள் என்ற பட்டியலில் உருளைக்கிழங்கு அதிலும் குறிப்பாக முளைவிட்ட உருளைக்கிழங்கு, தக்காளி, சிவப்பு மிளகாய் ஆகியவைகளை தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இதற்கான காரணம் குறித்து ஊட்டசத்து நிபுணரான கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது,‘பொதுவாக ஒரு சிலருக்கு மூட்டு வலி மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து மேற்கூறிய உணவுப் பொருள்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு செய்முறைகளில் அல்லாமல், வேறு வகையிலோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால் மூட்டு வலி மற்றும் வயிறு எரிச்சல் குணமடையாது. இந்த தாவர வகைகள் அனைத்தும் இரவில் வளர்ச்சியடைவதால் நைட் ஷேடு உணவுப் பொருள்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.
ஆனால் அதிலும் விதிவிலக்குகள் உண்டு. குறிப்பாக முளை விட்ட உருளைக் கிழங்கை வாங்கி அவற்றைப் பொரித்து சாப்பிடுவது, தக்காளி நன்கு பழுக்காத நிலையில் அவற்றை சமையலுக்கு பயன்படுத்துவது, அதிக விதையுள்ள கத்திரிக்காயை பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுவது இப்படி செய்யும் போது, அவை உடலில் தீங்கும் விளைவிக்கும் கால்சிட்ரோல் (calcitriol) என்னும் ஹோர்மோனை சுரக்கச் செய்து, தேவைக்கும் அதிகமான கால்சிய சத்தினை உறிஞ்சுவதற்கு தூண்டுகிறது. இதனால் உடலில் உள்ள தோள் மூட்டுகளில் இவை தங்கி வலியை ஏற்படுத்துகிறது.குறிப்பாக ஓர்த்தரைடீஸ் என்ற பாதிப்பை இது ஏற்படுத்துகிறது.
அதற்காக இத்தகைய உணவுப் பொருள்களை முற்றாக தவிர்க்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் இவற்றை அளவுடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகத்தான் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக மூட்டு வலி மற்றும் வயிறு எரிச்சல் உள்ளவர்கள் மட்டும் இத்தகைய உணவுப் பொருள்களை ஓரளவிற்கு மட்டுமே பயன்படுத்த முன்வரவேண்டும்.’ என்றார்.
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM