இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ரஹ்மான் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருடத்தில் நுளம்புப்பெருக்கத்துக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளொன்றுக்கு 100 வீட்டு வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது. வீட்டுப்பீலிகள், கிணறுகள் உள்ளிட்டவற்றில் நுளம்புப்பெருக்கம் காணப்படுகின்றது. அத்துடன், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சிலர் பின்பற்றாத நிலைமை உள்ளது. மேலும், நகர்ப்பகுதிகளிலுள்ள சில வீடுகள் பூட்டப்பட்டுள்ளமையினால், அவற்றில் சோதனை மேற்கொள்ள முடியாத நிலைமை உள்ளதுடன், நுளம்புப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைமையும் உள்ளது.
கடந்த காலத்தில் நுளம்புப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கிணறுகளில் மீன் குஞ்சுகளை விடும் நடவடிக்கையை சுகாதாரத் திணைக்களம் மேற்கொண்டிருந்தது. இந்த நடவடிக்கையை சுகாதாரத் திணைக்களத்தினால் மட்டும் செய்ய முடியாது. பொதுமக்கள், உள்ளூராட்சி சபைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டு மெனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM