"இந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது அவதூறு பேசும் நாட்டின் ஆட்சியாளர்களான அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடி கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரி அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினரான எலப்பிரிய நந்தராஜ் தலைமையிலான மலைநாட்டு முற்போக்கு மக்கள் அமைப்பினர் கினிகத்தேனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்று காலை ஆரம்பித்த இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் 100ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு அனுப்பி வைக்ககூடிய தபால் அட்டைகளும் மக்களிடம் கையொப்பம் இட்டு பெறப்பட்டது.
"பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரிய மரியாதையை வழங்காதபட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகலான அமைச்சர்கள் அவ்வப்பகுதியில் பிக்குகளிடம் ஆசீர்வாதங்களை பெற்று அவரவர் பதவியில் அமர்கின்றனர்.
இவ்வாறு ஆசிகளை பெற்று பதிவியில் அமரும் அமைச்சர்கள் பிக்குகளுக்கு எதிராக அவதூறு வார்த்தை பிரயோகங்களை பிரயோகிக்கின்றனர்.
இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என கோரியே இவ் எதிர்ப்பு நடவடிக்கையும், தபால் அட்டை கையொப்பம் பெறலும் இடம்பெறுவதாக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM