"பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரிய மரியாதையை வழங்காதபட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும்"

Published By: Digital Desk 7

25 Sep, 2017 | 11:40 AM
image

"இந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது அவதூறு பேசும் நாட்டின் ஆட்சியாளர்களான அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடி கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரி அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினரான எலப்பிரிய நந்தராஜ் தலைமையிலான மலைநாட்டு முற்போக்கு மக்கள் அமைப்பினர் கினிகத்தேனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஆரம்பித்த  இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் 100ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு அனுப்பி வைக்ககூடிய தபால் அட்டைகளும் மக்களிடம் கையொப்பம் இட்டு பெறப்பட்டது.

"பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரிய மரியாதையை வழங்காதபட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகலான அமைச்சர்கள் அவ்வப்பகுதியில் பிக்குகளிடம் ஆசீர்வாதங்களை பெற்று அவரவர் பதவியில் அமர்கின்றனர்.

இவ்வாறு ஆசிகளை பெற்று பதிவியில் அமரும் அமைச்சர்கள் பிக்குகளுக்கு எதிராக அவதூறு வார்த்தை பிரயோகங்களை பிரயோகிக்கின்றனர்.

இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என கோரியே இவ் எதிர்ப்பு நடவடிக்கையும், தபால் அட்டை கையொப்பம் பெறலும் இடம்பெறுவதாக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33