கொழும்பில், கொள்ளுப்பிட்டி மற்றும் மருதானை பகுதிகளில் இரு விபசார விடுதிகள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கொள்ளுப்பிட்டியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியின் உரிமையாளர் மற்றும் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து குறித்த விபச்சார விடுதிகள் நேற்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மருதானை சங்கராஜ மாவத்தையில் மற்றுமொரு விபசார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. அதனை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணொருவரும் மேலும் 7 பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 24 வயது முதல் 48 வரையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் இன்றைய தினம் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM