எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம்

Published By: Devika

23 Sep, 2017 | 03:11 PM
image

கல்முனையில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சம்பந்தன் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை (23) வாழைச்சேனைக்கு விஜயம் செய்து, காகித ஆலையைப் பார்வையிட்டார்.

காகித ஆலையைப் புனரமைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

தற்போது நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் வாழைச்சேனை காகித ஆலையினை கொரிய நிறுவனம் ஒன்று புனரமைத்து 20 வருட குத்தகை அடிப்படையில் செயற்படுத்த முன்வந்துள்ளதாகவும், அரசாங்கம் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கி ஆலையினை இயங்க வைப்பதில் தாமதம் காட்டுவதாகவும் ஊழியர்கள் இரா.சம்பந்தனிடம் தெரிவித்தனர்.

மேலும், தொழிற்சாலை இயங்காமல் இருப்பதற்காகச் சிலர் மறைமுகமாக  நிர்வாக ரீதியாகத் தலையீடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மீண்டும் ஆலையினை இயங்க வைப்பதால் பிரதேசத்தில் 1200 பேருக்கு நேரடியான வேலை வாய்ப்பு கிடைப்பதுடன்  5000 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்கு வழியமைக்கக் கூடியவாறு இருக்கும் என்று ஊழியர்கள் இதன்போது கூறினர்.

இவர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து கொண்ட சம்பந்தன், மிக விரைவில் தனிப்பட்ட முறையில் பிரதமருடன் பேசி கொரிய நிறுவனம் இங்கு வந்து முதலீடு செய்து இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53