கல்முனையில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சம்பந்தன் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை (23) வாழைச்சேனைக்கு விஜயம் செய்து, காகித ஆலையைப் பார்வையிட்டார்.
காகித ஆலையைப் புனரமைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
தற்போது நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் வாழைச்சேனை காகித ஆலையினை கொரிய நிறுவனம் ஒன்று புனரமைத்து 20 வருட குத்தகை அடிப்படையில் செயற்படுத்த முன்வந்துள்ளதாகவும், அரசாங்கம் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கி ஆலையினை இயங்க வைப்பதில் தாமதம் காட்டுவதாகவும் ஊழியர்கள் இரா.சம்பந்தனிடம் தெரிவித்தனர்.
மேலும், தொழிற்சாலை இயங்காமல் இருப்பதற்காகச் சிலர் மறைமுகமாக நிர்வாக ரீதியாகத் தலையீடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மீண்டும் ஆலையினை இயங்க வைப்பதால் பிரதேசத்தில் 1200 பேருக்கு நேரடியான வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் 5000 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்கு வழியமைக்கக் கூடியவாறு இருக்கும் என்று ஊழியர்கள் இதன்போது கூறினர்.
இவர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து கொண்ட சம்பந்தன், மிக விரைவில் தனிப்பட்ட முறையில் பிரதமருடன் பேசி கொரிய நிறுவனம் இங்கு வந்து முதலீடு செய்து இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM