கடந்த காலத்தில் எமது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கொன்று கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அளித்த சாட்சியத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு 25 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அப்போதைய ஹோமாகம மஜிஸ்திரேட் நீதிவானாக கடமையாற்றிய ரங்க திசாநாயக்க ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சாட்சியமளித்த ஞானசார தேரர் யுத்தம் நடைபெற்றபோதும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் தான் உதவியுள்ளதாக கூறிய அவர், பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காக அவர் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு ஆதரவு அளித்து வந்ததாகத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்ப்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சில முக்கிய இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளை பொலிஸார் கைது செய்ததாக குற்றம்சாட்டிய ஞானசார தேரர், தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
மேலதிக வழக்கு விசாரணை அடுத்த மாதம் முன்றாம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM