தமிழர் தாயகப்பகுதியில் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள 6ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராக மீளவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு மீளவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சுமந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்கள், சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சட்டமா அதிபர், ஆர்சிலோன் மிட்டல் நிறுவனம், ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் வடக்கு, கிழக்கிற்கு பொருத்து வீட்டுத்திட்டம் சற்றேனும் பொருத்தமில்லை. அங்குள்ள காலநிலைக்கு இந்த வீட்டுத்திட்டம் பொருத்தமானதாக இல்லை. மேலும் 65 ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்தின் கேள்வி மனுக்கோரலின் அடிப்படையில் முதற்கட்டமாக 6 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
ஆகவே பொருத்து வீடு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுப்பதற்கு உயர் நீதிமன்றம் உடன் தடை விதிக்க வேண்டுமென அம்மனுவில் சுட்டுரைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் சுவாமிநாதன், ஆர்சிலோன் மிட்டல் நிறுவனம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவ்வழக்கு ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
ஆகவே மனுதாரரின் வழக்கினை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் சுவாமிநாதன் தரப்பில் ஆஜரான ஜனாதி பதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தலைமையிலான குழுவினர் வாதிட்டனர். இதனையடுத்து பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக மீளவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற உரிமத்தினை வைத்துக்கொண்டு அவ்வழக்கினை மீளப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM