மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஒரு ''புன்னகை பொய்யர்'' என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட் டர் ஜெனரல் தப்புல டி லிவேரா வர்ணித் தார்.
அத்துடன் அர் ஜுன மகேந்திரனை பொய்யாக உரையா டக் கூடியவர் என வர்ணித்த அவர் அவரது சாட்சியத்தில் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். சாட்சி குறுக்கு விசாரணைகளின் இடை நடுவே அர்ஜுன மகேந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கேள்விகளுக்கு சிரித்தவாறு (சற்று அலட்சியப் போக்கில்) பதில் அளித்துக் கொண்டிருந்த போது கடும் தொணியில் சாட்சிக் கூண்டை நோக்கி அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று வழமை போன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைகள் ஆரம்பமாகின. உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்ரசிறியின் தலைமையில் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பமாகின.
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை குறுக்கு கேள்விகளுக்கு உட்படுத்தினார்.
அந்த கேள்விகள் கேட்கப்படும் முன்னர் ஆணைக் குழு விசாரணைகள் ஆரம்பமானதும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மன்றில் சிறப்பு அறிவித்தல் ஒன்றினை விடுத்தார்.
கடந்த புதன் அன்று ஆணைக் குழு விசாரணைகள் இடம்பெற்ற போது, அர்ஜுன மகேந்திரனின் சட்டத்தரணியான ஜனதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அர்ஜுன மாகேந்திரனை குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் கோருவது, பொதுமக்களின் வரிப் பணத்தை வீணாக்கும் செயல் என சாடலாக கருத்துரைந்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வண்ணம் யசந்த கோதாகொடவின் அறிவித்தல் அமைந்திருந்தது. தாம் பொது மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெறுவதாலேயே உண்மையை வெளிக்கொண்டுவர சிரமப்படுவதாகவும், ஜனதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வாவின் கூற்று அவதூறானது எனவும் அவர் சுட்டிக்காட்டி இரு பக்க அறிவித்தல் ஒன்றினை விடுத்தார்.
இதனையடுத்து ஆணைக் குழுவின் நீதியரசரான பிரசன்ன ஜயவர்தன, கடந்த 7 மாதங்களாக சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் தமக்கு கிடைக்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது எனவும் அதனை தாம் மிக கெளரவமா மதிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அர்ஜுன மகேந்திரனிடம் குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, 26.02.2015 ஆம் திகதி காலை மத்திய வங்கியில் நடைப் பெற்ற ஒரு சந்திப்பு தொடர்பில் கடிதம் ஒன்றை மையப்படுத்தி குறுக்கு விசாரணை செய்தார்.
இதன்போது முன்னைய சாட்சியாளர்களையும் மையப்படுத்தி கேள்விகளை ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா முன்வைத்தார்.இதன்போது சிரித்தவாறே அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளிக்கையில் கோபம் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா,
இது ஒன்றும் நகைச் சுவை அல்ல. ஏன் சிரிக்கின்றீர். நீர் ஒரு புன்னகை பொய்யர். நீர் பொய்யாகவே உரையாடக் கூடியவர் என தொடர்ச்சியாக அர்ஜுன மகேந்திரனை ஒரு பொய்யர் என வர்ணித்தவாறு குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM