கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்தவு டன் அந்த சபைகளின் நிர்வாகம், ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மூன்று மாகாணங்களுக்கும் மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் இம்மாத இறுதிக்குள் முடிவடைகின்றது.சப்ரகமுவவின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 27 ஆம் திகதியும் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 30 ஆம் திகதியும் முடிவுக்கு வருகின்றது. இது குறித்து உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கருத்துத் தெரிவிக்கையில்
கிழக்கு,சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளின் நிர்வாகம் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.இனிவரும் தேர்தல்கள் கலப்பு முறையில் இடம்பெறவுள்ளதால், மாகாணசபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தொகுதி எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும். அது நிறைவடையும் வரை, மூன்று சபைகளுக்கும் தேர்தலை நடத்த முடியாது.
வரும் மார்ச் மாதத்துக்குள் எல்லை மீள் நிர்ணயப் பணிகளை அரசாங்கம் முடித்து விடும். மார்ச் மாதம் தேர்தலை நடத்துவதற்கான ஒழுங்குகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கலாம்.
மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்த மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னர், தேர்தல் ஆணைக்குழு வேட்புமனுக்களைக் கோர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM