(எம்.எம்.மின்ஹாஜ்)
மதுசாரம் கூடிய விஸ்கி போன்றவற்றிற்கு பதிலாக பியர், வைன் உற்பத்திகளை அதிகரிக்கவுள்ளோம். இதன்படி பியர், வைன் உற்பத்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெறுவதனை இலகுப்படுத்தவுள்ளோம். இது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் போது இதற்கான நடவடிக்கைகள் உள்ளடக்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது புத்திக்க பதிரண எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புத்திக பதிரண எம்.பி இலங்கை தொடர்பான ஹோட்டல்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது மேலதிக கேள்வி நேரத்தில் தற்போது நாட்டின் பியர் உற்பத்திகள் அதிகரிக்கப்படவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல் உண்மையா? அப்படியாயின் அது நல்லாட்சிக்கு பாதிப்பாகாதா? என்றார்.
இந்த கேள்விக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க பதிலளிக்கையில்,
நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் உண்மை நிலை தெரியவரும். ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் பியர் விற்கப்படுகின்றன. எனினும் இலங்கையில் திருட்டுத் தனமாக சில இடங்களில் பியர் விற்கப்படுகின்றன. இதனை தடுக்கும் நோக்குடன் இந்நிலையில் மதுசாரம் குறைந்த பியர், வைன் உற்பத்திகளை அதிகரிக்கவுள்ளோம்.
இதற்கான யோசனை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளோம். இதன்படி பியர் இவைன் உற்பத்திகளுக்கான அனுமதி பத்திரங்களை பெறுவதனை இலகுப்படுத்தவுள்ளோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM