இலங்கை வந்துள்ள அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை

Published By: Devika

22 Sep, 2017 | 04:40 PM
image

தடை விலக்கப்பட்டதையடுத்து இருபது ஆண்டுகள் கழித்து இலங்கை வந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல், கொழும்பிலும் வடபகுதியிலும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புலிகளுடன் தொடர்புடைய, பயங்கரவாதத்துக்கு உதவும் குற்றச்சாட்டுகளின் பேரில் சுமார் நானூறு தனி நபர்களையும் அமைப்புகளையும் கடந்த ஆட்சியின்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தடை செய்திருந்தார்.

அந்தத் தனி நபர்களுள் அருட்தந்தையும் ஒருவர்.

இந்தக் குற்றச்சாட்டையடுத்து அருட்தந்தை 1997ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார். 

எனினும், புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களை மீளக் கட்டியெழுப்பும் தற்போதைய அரசின் முயற்சியின் கீழ் மேற்படி தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இதையடுத்தே அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் இலங்கை வந்துள்ளார். இதன்போது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷப் உட்பட இலங்கையின் தென், வட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் குற்றச்சாட்டினால், ஒரு கிறிஸ்தவ அருட்தந்தையான தாம் சமய ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50