வல்லப்பட்டைகளை கடத்தியவர் கைது

Published By: Digital Desk 7

22 Sep, 2017 | 11:21 AM
image

சட்டவிரோதமாக ஒரு தொகை வல்லப்பட்டைகளை டுபாய் நாட்டிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய  தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்நத வியாபாரி என சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் தம்முடன் வைத்திருந்த பையில் சந்தேகம் கொண்ட சுங்கப்பிரிவினர், குறித்த பையை சோதனையிட்ட போதே வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 50 கிலோ கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  அவை 30 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்தவை என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த சந்தே நபருக்கு 3 இலட்சம் ரூபா தண்டப் பணம்  விதித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33