பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்வதற்கு எமது விசேட குழுவினரை அனுப்பி அவர்கள் இறுதி முடிவை அறிவித்தபின்னரே நாம் பாகிஸ்தான் சென்று விளையாடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்போம் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஷ்லி சில்வா தெரிவித்தார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
இதில் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரின் கடைசி இருபதுக்கு 20 போட்டியை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு எமது வீரர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நாம் அங்கு சென்று விளையாடுவோம் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது.
பாகிஸ்தான் தொடர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க, இலங்கைக் கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா மற்றும் கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தத் தொடர் குறித்து கருத்து தெரிவித்த அணித் தலைவர் சந்திமால், புதிய வீரர்களுடன் சேர்த்து நல்லதொரு அணியை எமக்கு தேர்வுக்குழு தந்திருக்கிறது. இதை வைத்துக்கொண்டு நாம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறந்ததொரு போட்டியைக் கொடுக்க எதிர்பார்க்கிறோம்.
அஞ்சலோ மெத்தியூஸ் காயம் காரணமாக முதலாவது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். அவரது இடத்தை நிரப்புவது கடினம். ஆனாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ அணியில் இணைந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
இந்தத் தொடரில் நடைபெறவுள்ள இரு டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM