(க.கமலநாதன்)
மேல் மாகண அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதையடுத்து மறுதினம் 30 ஆம் திகதி கொழும்பு மெனிங் சந்தையை பேலியகொடையிற்கு இடமாற்றம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெறும் என்று மேல்மாகாண அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுர்க்க வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாநகர மட்டும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் 160 அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் மூலம் கொழும்பில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த கோட்டை பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மெனிங் சந்தையை பேலியகொடை மீன்சந்தைக்கு அருகாமையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனடிப்படையில் சென் ஜோன் மீன் சந்தை, மறக்கறி மற்றும் மொத்த பழ வியாபாரிகளின் கடைத்தொகுதிகளும் பேலியகொடையில் இருக்கும்.
மேலும் குறித்த சந்தையின் இடமாற்ற செயற்பாடுகளுக்கென நான்கு பில்லியன் ரூபா நிதி ஒதுக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அரச நிறுவனங்கள் யாவும் பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளமை குறித்த விடயங்கள் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த அபிவிருத்தி திட்டங்களால் மக்கள் குடியிருப்புக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் அதற்கான மாற்றுத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM