கென்ய தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கை (3 பில்லியன் ரூபா) திருடிய குற்றச்சாட்டில், சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
மோஷீன் ரணதுங்க என்பவர் 2012, ஜூலை மாதம் 90 நாள் விசாவில் கென்யா சென்றிருந்தார். எனினும் சட்டவிரோதமாக 2016ஆம் ஆண்டு வரை அங்கு தங்கியிருந்த அவர், தான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கென்யாவை விட்டுத் தப்பியோடியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவர் கென்யா வந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மோஷீனை நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது, அவர் ஏற்கனவே நாட்டை விட்டுத் தப்பியோடியவர் என்றும், தற்போது சட்டவிரோதமாக கென்யாவில் வாழ்ந்துவரும் அவரது கடவுச்சீட்டு இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறிய அரச தரப்பு சட்டத்தரணி, மோஷீனை பிணையில் விடுவிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM